தேர்தல் சீட்: விண்ணப்பங்களை வரவேற்கும் கேப்டன்
சென்னை:
சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் சீட் கோரி ரூ. 10,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனநடிகர் விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் சீட் கோரி ரூ.10,000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம் எனஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சனிக்கிழமை அறிவித்தார். இதைத் தொடர்ந்து தேசிய முற்போக்கு திராவிட கழகம்தேர்தல் டிக்கெட் தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதுதொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழகம், புதுவை சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும்கழகத் தொண்டர்களிடமிருந்து, அனைத்து சட்டசபைத் தொகுதிகளுக்கும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள கட்சித் தலைமைக் கழகத்தில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பங்களைப் பெற்றுவழங்கலாம். தலைமைக் கழகத்தில் வழங்கப்படுகிற விண்ணப்பங்களில் தான் விண்ணப்பிக்க வேண்டும்.
234 தொகுதிகளில் பொதுத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறவர்கள் ரூ. 10,000 கட்டணம் செலுத்தியும், தனித்தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் ரூ. 5000 கட்டியும், புதுவையில் போட்டியிட விரும்புவோர் ரூ. 2000 செலுத்தியும்விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.