முன்னாள் காங். பெண் எம்எல்ஏவுக்கு ரூ. 5 லட்சம் நிதி-வீடு வழங்கிய ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆண்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்வேணிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவிக்கான காசோலை மற்றும்இலசவ வீட்டு மனைக்கான உத்தரவு ஆகியவற்றை முதல்வர் ஜெயலலிதா, இன்று கிருஷ்ணவேணியிடம் நேரில் வழங்கினார்.

ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணவேணி. தலித் வகுப்பைச் சேர்ந்தஇவர் மிகுந்த வறுமையில் வாடி வருவதாகவும், மாட்டுத் தொழுவத்தில் வசித்து வருவதாகவும் செய்திகள் வெளியாயின.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முகத்தின் கரியைப் பூசும் வகையில் கிருஷ்ணவேணிக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி மற்றும் இலவசவீடு வழங்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்ட கிருஷ்ணவேணி இன்று தலைமைச் செயலகத்தில் ஜெயலலிதாவைச்சந்தித்தார். அப்போது கிருஷ்ணவேணியிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலை மற்றும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டதற்கான உத்தரவுஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார்.

இதைப் பெற்றுக் கொண்ட கிருஷ்ணவேணி, ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். வரும் தேர்தலில்ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்காக அவர் பிரச்சாரம் செய்யக் கூடும் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+