இன்று மகாத்மாவின் 59வது நினைவு தினம்
சென்னை:
மகாத்மா காந்தியின் நினைவு நாள் தியாகிகள் தினமாக இன்று அனுசரிக்கப்படுகிறது. இன்று மகாத்மாவின் 59வது நினைவு தினமாகும்.
இந்த நாளையொட்டி இன்று காலை 11 மணிக்கு (இதே நேரத்தில்தான் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்) தமிழகம் முழுவதும் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.முன்னதாக இந்த தினத்தையொட்டி 11 மணிக்கு தமிழகம் முழுவதும் பொதுமக்கள் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்த வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இதுதொடர்பாக தமிழக அரசு உள்துறைச் செயலாளர் பவன் ரெய்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில்,
இந்த ஆண்டும் வழக்கம் போல் காலை 11 மணி முதல் 11.02 மணி வரை தியாகிகளுக்கான மெளன அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. மெளன அஞ்சலி செலுத்தும் நேரத்தை அறிவிக்கும் விதமாக 11 மணிக்கு சங்கொலி எழுப்பப்படும். சங்கொலி கேட்டவுடன் அனைத்து மக்களும் தங்கள் பணிகளை நிறுத்தி விட்டு 2 நிமிட நேரம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்த வேண்டும்.
வானொலி ஒலிபரப்பு, சாலைப் போக்குவரத்து ஆகியவையும் 2 நிமிடங்களுக்கு நிறுத்தப்படும். அதேபோல 11 மணிக்குப் புறப்பட வேண்டிய விமானங்கள், கப்பல் ஆகியவையும் 11.02க்குப் புறப்படும். ரெயில்களும் 11 மணிக்கு நிறுத்தப்படும் என்று கூறியிருந்தார் பவன் ரெய்னா.
அதன்படி வானொலியில் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது. போக்குவரத்து சிக்னல்கள் ஆப் செய்யப்பட்டு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
தலைவர்கள் அஞ்சலி:
காந்தியின் நினைவு நாளையொட்டி சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுனர் பர்னாலா, அமைச்சர்கள், பல்துறைப் பிரமுகர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications