கட்சியின் மதிப்பை காப்பது முக்கியம்: வைகோ

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்:

மதிமுகவின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும், தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக உள்ளேன் என்றுஅக் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சங்கரன்கோவிலில் நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு வைகோ அளித்த பதில்:

கே. மதிமுகவின் தற்போதைய அரசியல் நிலைபாடு என்ன?
ப. மதிமுக ஏற்கனவே உள்ள நிலைபாட்டில் எந்த மாறுதலும் இல்லை. 2004ம் ஆண்டு சிறைச்சாலையை விட்டு வெளியே வந்தபோது இருந்த மதிமுகவின் அதே நிலைபாடு தான் தொடர்கிறது.

கே. மதிமுகவின் தொண்டர்கள் மத்தியில் மாற்றுக் கட்சி கூட்டணியை எதிர்பார்ப்பது போல் தெரிகிறதே?
ப. மதிமுகவின் உயிர் சக்தியே தொண்டர்கள் தான். மதிமுகவின் கடுமையான தோல்வியிலும், துன்பத்திலும் தங்களின் நலன் என்றுஎதையும் கருதாது இயக்கத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிக்கும் வகையில் தொண்டர்கள் உள்ளார்கள்.

அவர்களின் மனம் பல சந்தர்ப்பங்களில் காயப்பட்டிருக்கிறது. 19 மாத சிறைவாசத்தின் போதும் அவர்கள் உள்ளம் ரத்தக் கண்ணீர்வடித்ததும் உண்மை. மதிமுகவின் கெளரவமான அந்தஸ்தும், மரியாதையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது தான்தொண்டர்களின் நோக்கம்.

மேலும் இயக்கத்தின் எதிர்காலத்தையும், நிரந்தர மதிப்பையும் தொண்டர்களின் நலனையும் காப்பதில் நான் கவனமாக உள்ளேன்.

கே. கூட்டணி எதுவாக இருந்தாலும் எத்தனை தொகுதிகள் கேட்பீர்கள்?
ப. கூட்டணி எதுவாக இருந்தாலும் என்ற வார்த்தையே தவறு.

கே. வரும் தேர்தலில் எந்த தொகுதியில் போட்டியிட உள்ளீர்கள்?
ப. தேர்தலில் நிற்கும் போது உங்களிடம் சொல்கிறேன் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+