ஊழியர்கள் ஸ்டிரைக்: விமான சேவைகள் பாதிப்பு
சென்னை:
நாடு முழுவதும் விமான நிலைய ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் காரணமாக சென்னை உள்பட நூற்றுக்கும்மேற்பட்ட விமான நிலையங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லி மற்றும் மும்பை விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.இதன் படி இரு விமான நிலையங்களின் பங்குகள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இரு விமானநிலையங்களின் பராமரிப்புகளையும் தனியார் நிறுவனங்களே இனி மேற்கொள்ளும்.மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடது சாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அரசின் இந்தநடவடிக்கையைக் கண்டித்து இன்று முதல் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை விமான நிலைய ஊழியர்கள்மேற்கொண்டுள்ளனர்.
ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தத்தால் நாடு முழுவதும் உள்ள 126 விமான நிலையங்களில் பணிகள் முற்றிலும்பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் அலுவலகங்களைப் புறக்கணித்து முக்கிய நுழைவாயில்முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில், ஊழியர்கள், அதிகாரிகள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். வேலை நிறுத்தம்காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்றாலும் கூட போராட்டம் நீடித்தால் உள்நாடு மற்றும் வெளிநாட்டுவிமானச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க மத்திய அமைச்சரவை இன்று பிற்பகல் அவசரமாக கூடிவிவாதிக்கவுள்ளது.