ஆடிட்டர் வழக்கு: ஜெயேந்திரர் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு விசாரணை மார்ச் 1ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.சங்கர மட முன்னாள் பக்தர் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில்விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 12 பேரில் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு உள்ளிட்ட 9 பேர்நேரில் ஆஜராகியிருந்தனர்.
இந்த வழக்கை புதுவைக்கு மாற்றக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனு விசாரணையில்உள்ளதால் இந்த விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்று ஜெயேந்திரரின் வழக்கறிஞர் கோரினார்.
இதை ஏற்ற நீதிபதி செல்வக்குமார் மார்ச் 1ம் தேதிக்கு வழக்கை தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications