ஜெ.வுக்கு சீட் கேட்டு விண்ணப்பம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு சீட் தரக் கோரி தமிழக அமைச்சர்கள் ஏராளமான விண்ணப்பங்களை அதிமுக தலைமைக் கழகஅலுவலகத்தில் தாக்கல் செய்தனர்.
தமிழகம், புதுவை மற்றும் கேரள மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல்விண்ணப்பிக்கலாம் என ஜெயலலிதா சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.அதன்படி இன்று முதல் விண்ணப்பங்களை வழங்கும் பணி தொடங்கியது. காலை 11 மணிக்கு விண்ணப்பங்கைளப் பெறும்பணியை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், ஜெயக்குமார், பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாபோட்டியிடக் கோரி தலா ரூ. 10,000 செலுத்தி விண்ணப்பங்களைத் தாக்கல் செய்தனர்.
ஆண்டிப்பட்டி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு தொகுதிகளில் போட்டியிடக் கோரி ஜெயலலிதா சார்பாக விண்ணப்பங்கள்தாக்கல் செய்யப்பட்டன. தேர்தலில் போட்டியிட சீட் கேட்டு ஏராளமான அதிமுகவினர் கட்சித் தலைமைக் கழகத்திற்குபடையெடுத்ததால் ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை முழுவதும் அதிமுகவினரின் தலைகளே தெரிந்தன. அந்தப் பகுதிமுழுவதும் அதிமுகவினர் நிரம்பி வழிகின்றனர்.