இன்று 28 அகதிகள் வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையிலிருந்து இரண்டு பிரிவுகளாக 28 தமிழர்கள் இன்று அகதிகளாக தமிழகம் வந்தனர்.
இலங்கையிலிருந்து வரும் அகதிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வரை 300க்கும் மேற்பட்டஅகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இந்த நிலையில் இலங்கையின் திரிகோணமலையிலிருந்து 20 அகதிகள் தனுஷ்கோடி அருகேஉள்ள அரிச்சனை பகுதிக்கு படகுகளில் வந்தனர்.
இதே போல, மன்னார் பகுதியைச் சேர்ந்த 8 பேர் ராமேஸ்வரத்திற்கு வந்தனர். இவர்கள் அனைவரையும் தனுஷ்கோடி காவல்நிலையத்தில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அனைவரும் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications