விமான நிலைய ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்
சென்னை:
மும்பை, டெல்லி விமான நிலையங்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததைக் கண்டித்து சென்னை விமானநிலையத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் குதிக்கிறார்கள். இதனால் விமான சேவைகடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
மும்பை மற்றும் டெல்லி சர்வதேச விமான நிலையங்களை பராமரிப்பதை வெளிநாட்டு நிறுவனங்களிடம் விட்டுள்ளது மத்தியஅரசு. இது தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதற்கு நாடு முழுவதும் உள்ள விமான நிலையஊழியர்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து சென்னை விமான நிலையத்தில் இன்று வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. விமானநிலையத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் இதில் பங்கேற்கிறார்கள். இந்த வேலைநிறுத்தம் காலவரையற்றதாக இருக்கும்என்று ஊழியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையைப் போலவே, நாடு முழுவதும் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் வேலை நிறுத்தம் இன்றுமுதல் தொடங்குகிறது. இதன் காரணமாக விமான சேவை கடுமையாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
விமான நிலைய ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைத் தடுக்க எஸ்மா சட்டத்தை மத்திய அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.
சென்னையில், விமான சேவை பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய இயக்குநர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார். விமான நிலையத்தில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications