For Daily Alerts
Just In
ஏர் உழவன் முடக்கம்: சு.சுவாமி வழக்கு
டெல்லி:
ஜனதாக் கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்ததை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் கட்சித் தலைவர்சுப்ரமணியம் சுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
ஜனதாக் கட்சியின் ஏர் உழவன் சின்னத்தை தேர்தல் ஆணையம் தற்போது முடக்கி வைத்துள்ளது. இதை எதிர்த்து டெல்லிஉயர்நீதிமன்றத்தில் சுவாமி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், தேர்தல் வரப் போகும் நிலையில், கட்சி சின்னத்தை முடக்கி வைத்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவு சட்டவிரோதமானது. இது எனது கட்சியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும். எனவே சின்னத்தை முடக்கி வைத்த தேர்தல் ஆணையத்தின்உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.
Comments
Story first published: Wednesday, February 1, 2006, 5:30 [IST]