For Daily Alerts
Just In
சானியாவின் உடைக்கு தடை விதிக்க முடியாது
லக்னோ:
டென்னிஸ் இளம் புயல் சானியா மிர்சா போட்டிகளில் விளையாடும் போது குட்டைப் பாவாடை அணிவது சர்ச்சயைஏற்படுத்தியது. முஸ்லிம் மத தலைவர்கள் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்த நிலையில் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியத்தின் முஸ்லிம் சீர்திருத்தக் குழு கூட்டத்தின்முடிவில் முஸ்லிம் சட்ட வாரிய பொது செயலாளர் மவுலானா நிசாமுதீன் நிருபர்களிடம் கூறியதாவது:
சானியா மிர்சா ஒரு விளையாட்டு வீராங்கனை, அவர் விளையாடுவதற்கு செளகரியமாக உடை அணிகிறார். இது போன்றவிஷயங்களில் தடை உத்தரவு பிறப்பிப்பது அர்த்தம் இல்லை. விளையாட்டுப் போட்டிக்கும் குறிப்பிட்ட உடைகளை அணியவேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இந்த பிரச்சினை முஸ்லிம் தனிநபர் சட்ட வரம்புக்குள் வராது என்றார்.
Comments
Story first published: Thursday, February 2, 2006, 5:30 [IST]