அண்ணா சமாதியில் ஜெ, கருணாநிதி, வைகோ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பேரறிஞர் அண்ணாவின் 37வது நினைவு நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டதலைவர்கள் மெரீனா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் முதல்வரும், திமுக நிறுவனருமான அண்ணாவின் 37வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்துஇன்று காலை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினார்.முதல்வருடன் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர்கள், எம்.பிக்கள்,எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோல திமுக தலைவர் கருணாநிதி, பொதுச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட திமுகவினரும் அண்ணா நினைவிடத்தில்அஞ்சலி செலுத்தினர்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் மதிமுகவினர் அண்ணா சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.












Click it and Unblock the Notifications