சீட்: விஜயகாந்த் கட்சியில் 140 பேர் விண்ணப்பம்
பெரம்பலூர்:
தேமுதிக சார்பில் போட்டியிட சென்னையில் இது வரை 140 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்திடம், அக் கட்சியின் சார்பில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துஒன்பது பேர் பணத்துடன் விண்ணப்ப மனுவை பெரம்பலூரில் கொடுத்தனர்.
தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். நேற்று முதல் அக்கட்சி சார்பில், தேர்தலில் போட்டியிடுபவர்களிடம் விண்ணப்பம் வாங்கப்படுவதாக விஜயகாந்த்அறிவித்திருந்தார்.இந்த நிலையில் பெரம்பலூர் மாவட்ட தேமுதிக அலுவலகத்துக்கு வந்த விஜயகாந்திடம் வரும் சட்டசபை தேர்தலில் அக்கட்சிசார்பில் போட்டியிட விரும்பும் 9 பேர் பணத்துடன் கூடிய விண்ணப்ப மனுவை கொடுத்தனர்.
இதன் படி விஜயகாந்தின் மைத்துனர் சுதீஷ், மாநில கொள்கைபரப்புச் செயலர் சந்திரகுமார், மாநில துணைச் செயலர் பார்த்தசாரதி,தலைமை நிலையச் செயலர் முருகேசன், மாநில பொருளாளர் சுந்தர்ராஜன், சேலம் மாவட்ட தலைவர் இளங்கோவன், மதுரைமாவட்ட தலைவர் ராஜா, விழுப்புரம் மாவட்ட தலைவர் வெங்கடேசன், திருவள்ளுவர் மாவட்ட இளைஞரணி செயலர் சேகர்ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்ப மனுவை, தலா ரூ.10 ஆயிரத்துடன் தலைவர் விஜயகாந்திடம்கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications