4 பலி: சாராய வியாபாரி, 3 மனைவிகள் கைது
சேலம்:
சேலம் அருகே வேப்பிலைப்பட்டி கிராமத்தில், கள்ளச் சாராயத்திற்கு 4 பேர் பலியான சம்பவம் தொடர்பாக சாராய வியாபாரியைபோலீஸார் கைது செய்தனர். சாராய விற்பனையில் துணையாக இருந்த அவரது 3 மனைவிகளும் கைது செய்யப்பட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக 5 போலீஸார் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.சேலம் மாவட்டம் வேப்பிலைப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன் என்ற கள்ளச் சாராய வியாபாரி போலீஸ் துணையுடன் சாராயம்விற்று வந்தார். மாமூல் கொடுத்துவிட்டு தைரியமாக விற்று வந்தார்.
இந் நிலையில் அவரிடம் சாராயம் குடித்த 4 பேர் இறந்தனர். 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 பேர் உயிர் போன பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரனையும், அவரது 3 மனைவிகளையும் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
ராஜேந்திரன் அதிமுகவைச் சேர்ந்தவர் ஆவார். ஏற்கனவே குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைவாசம் அனுபவித்தவர்.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் போலீசார் சிலமாதங்களில் மீண்டும் வேலைக்கு வந்துவிடுவார்கள். ஆனால், போன உயிர்கள்?












Click it and Unblock the Notifications