சென்னையில் கடும் பனி மூட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கடும் பனி மூட்டம் இருந்ததால் 3 மாவட்டங்களில் காலை 10 மணிவரை வாகனப் போக்குரவத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது இரவில் கடும் குளிரும், பகலில் கடும் வெயிலும் அடித்து வருகிறது. இன்று காலை சென்னை நகர் மற்றும்புறநகர்ப் பகுதிகளில் கடும் பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் வாகனப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.எதிரே நிற்பவர் கூடத் தெரியாத அளவுக்கு இந்தப் பனி மூட்டம் இருந்தது. காலை 10 மணிக்குப் பிறகுதான் பனி விலகி வெயில்அடிக்க ஆரம்பித்தது.
இதேபோல செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலையில் பனி மூட்டம் அதிகம் இருந்தது. இந்தப்பனி மூட்டம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications