For Daily Alerts
Just In
வீடு வீடாக சென்று அடையாள அட்டை: குப்தா
மதுரை:
வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அடையாள அட்டைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைத்தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தெரிவித்துள்ளார்.
மதுரையில் இன்று தென் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார் நரேஷ்குப்தா. அதன் பின்னர்செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அடுத்த மாத இறுதிக்குள் 90 சதவீத வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுவிடும்.அடையாள அட்டை வழங்கும் பணியை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வீடு வீடாக சென்று அட்டைகளை வழங்கவும்நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புறங்களில் நடமாடும் வாக்காளர் அடையாள அட்டை மையங்களைக் கொண்டு,அவர்களுக்கு அங்கேயே புகைப்படம் எடுத்து அட்டை வழங்கப்படும்.
இதுதவிர ஆன்லைன் மூலம் ஒரு மணி நேரத்தில் புகைப்பட அடையாள அட்டை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்றார் நரேஷ்குப்தா.
இதற்கிடையே கம்ப்யூட்டர்கள் உதவியுடன் போலி வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க சாப்ட்வேரையும் தேர்தல் கமிஷன்உருவாக்கியுள்ளது.
Story first published: Monday, February 6, 2006, 5:30 [IST]