150 இடங்களில் புதிய தமிழகம் தனித்து போட்டி
சென்னை:
வரும் சட்டசபைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடும். 150 தொகுதிகலில் எங்களது வேட்பாளர்களைநிறுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில், இன்று முதல் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் புதியதமிழகம் கட்சியினர் கோவையில் உள்ள கட்சி அலுவலகத்தில் விண்ணப்பங்களைக் கொடுக்கலாம்.150 தொகுதிகளில் போட்டியிட நாங்கள் முடிவு செய்துள்ளோம். இருப்பினும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது குறித்துப்பேசி வருகிறோம். கூட்டணி அமைந்தால் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவோம், இல்லாவிட்டால் தனித்துப் போட்டி.யாருடன் கூட்டணி தொடர்பாகப் பேசி வருகிறோம் என்பதை தெரிவிக்க இயலாது. (அதானே, பேசுனா தானே சொல்ல முடியும்)
தலித் மக்களின் மேம்பாட்டுக்காக வரும் மத்திய பொது பட்ஜெட்டில் கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்றார்.
வைகோவைப் போலவே தங்களுக்கு கெளரவம் தரும் வகையில் சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி அமைப்போம் என்றுமுன்பு கூறிவந்தார் கிருஷ்ணசாமி. ஆனால் திமுகவோ, அதிமுகவோ அவரை கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications