கோவை விபத்து: மாணவி, 2 மாணவர்கள் பலி
கோவை:
கோவை மாவட்டம் மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் ஒரு மாணவி, 2 மாணவர்கள்உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வரும் நித்யா, அருண்சங்கர், அருண் சுப்பையா, ஜோசப் ஆகிய நான்கு கல்லூரிமாணவர்கள் இன்று காலை கார் மூலம் சொந்த ஊருக்குக் கிளம்பினர்.அப்போது மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, முன்புறம் சென்று கொண்டிருந்த ஒருலாரி திடீரென பிரேக் போட்டு நின்றது. இதனால் நிலை தடுமாறிய கார், பயங்கர வேகத்தில் லாரி மீது மோதியது.
இதில் நித்யா, அருண்சங்கர், அருண் சுப்பையா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கார் டிரைவர் பிரபு தேவராஜ், மாணவர் ஜோசப் ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவி நித்யா சென்னையைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் லண்டனில் வசிக்கின்றனர். அவர்களுக்கு நித்யா இறந்த தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுக்கரை போலீஸார் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.