For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமதாஸ் தலைமையில் 3ம் அணி-திருமா யோசனை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வன்னியர்களும், ஆதிதிராவிடர்களும் அரசியல் சக்தியாக எழுச்சி பெற டாக்டர் ராமதாஸ் தலைமையில் புதிய அணி உருவாவதுஒன்றுதான் சரியான வழி என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.

அதிமுகவை நோக்கி செல்லும் கட்சிகள் என எதிர்பார்க்கப்படும் சில கட்சிகளில் விடுதலைச் சிறுத்தைகளும் ஒன்று. தேர்தல்நெருங்க நெருங்க திமுக கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சி குறித்தும் புதுப் புது செய்திகள் வெளியாகியவண்ணம் உள்ளது.

இந் நிலையில் திருமாவளவன் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,

தமிழக அரசியலில் புதிய சக்தியாக வன்னியர்களும், ஆதி திராவிடர்களும் உருவாகும் நேரம் வந்து விட்டது. இரு சமூகத்தினரும்இணைந்து புதிய அணி அமைக்க வேண்டும். அப்போதுதான் தமிழக அரசியலில் புதிய சக்தியாக இரு சமூகமும் எழுச்சி பெறமுடியும். இந்தக் கூட்டணிக்குத் தலைமை தாங்க மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி (ராமதாஸ்) முன்வர வேண்டும்.

இதுதொடர்பாக இதுவரை நான் தமிழ்க்குடிதாங்கியிடம் பேசவில்லை. ஆனால் நிச்சயம் பேசுவேன். எனது கருத்தை அவர் மறுக்கமாட்டார் என நம்புகிறேன்.

விடுதலைச் சிறுத்தைகளை திமுக கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்க்குடிதாங்கி தொடர்ந்து கோரி வருகிறார். ஆனால்இதுவரை கருணாநிதி எந்தப் பதிலையும் தராமல் மெளனம் சாதித்து வருகிறார். இது ஆதிதிராவிடர்களை அவமானப்படுத்தும்செயலாகும்.

மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி தலைமையில் மாற்று அணி அமைப்பது குறித்தும், கூட்டணி குறித்தும் வருகிற 15ம் தேதி கூடும்விடுதலைச் சிறுத்தைகள் மையக்குழுவில் விவாதித்து முடிவெடுக்கப்படும்.

இலங்கையில் மீண்டும் போர்ச்சூழல் எழுந்துள்ளது. இதைத் தடுக்க, மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இலங்கை அரசைதட்டி வைக்க வேண்டும். இலங்கையில் அமைதியின்மை நிலவுவதால் அகதிகள் தமிழகத்திற்கு வரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் அகதிகளுக்கான உணவு மானியத்தை மத்திய அரசு குறைத்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. தமிழர் விரோதநடவடிக்கை இது. மத்திய அரசின் இந்த தமிழர் விரோத நடவடிக்கையை தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும்கண்டிக்காமல் வாய் மூடியிருப்பது வருத்தம் தருகிறது என்றார் திருமாவளவன்.

ராமதாஸ் தலைமையில் மாற்று அணி அதாவது 3வது அணி என்ற கருத்தை திருமாவளவன் இந்த சமயத்தில் கூறியிருப்பது புதியபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் ராமதாஸ் தொடரப் போவதில் எந்த சந்தேகமும் இல்லாவிட்டாலும்,திருமாவளவனை கூட்டணியில் சேர்க்க கருணாநிதி தயக்கம் காட்டி வருகிறார்.

இதனால் குட்டையைக் குழப்பவே திருமாவளவன் இவ்வாறு பேசியிருப்பதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X