தண்டவாளத்தில் விரிசல்: 3 ரயில்கள் தப்பின
Subscribe to Oneindia Tamil
மதுராந்தகம்:
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த பெரிய விரிசல் தக்க சமயத்தில்கண்டுபிடிக்கப்பட்டதால் 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பின.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தண்டலம் என்ற இடத்தில் இன்று காலை தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்தப் பாதையில் வந்து கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ்,நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் வழியிலேயே ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகே தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் சரி செய்யப்பட்டது. அதன் பிறகே அந்த மூன்றுரயில்களும் தண்டலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் பெரும் அவதியுற்றனர்.
தக்க சமயத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.












Click it and Unblock the Notifications