மார்ச். 1 முதல் ரயில்வே ஊழியர்கள் ஸ்டிரைக்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மார்ச் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ரயில்வே, வருமான வரி, தபால் துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் கிட்டத்தட்டஒன்றரை கோடி பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
6வது ஊதியக் குழுவை அமைத்தல், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிடுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திரயில்வே ஊழியர்கள் பல கட்டங்களாகப் போராடி வந்தனர். தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட அவர்கள்முடிவு செய்துள்ளனர்.மார்ச் 1ம் தேதி ரயில்வே ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள். ரயில்வே ஊழியர்களின்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தபால் துறை, வருமான வரித்துறை ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
கிட்டத்தட்ட ஒன்றரை கோடி ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதால் மத்திய அரசுப் பணிகள் ஸ்தம்பிக்கும் அபாயம்ஏற்பட்டுள்ளது.
வேலைநிறுத்தம் தொடர்பான முறைப்படியான நோட்டீஸை, பல்வேறு ரயில்வே தொழிற்சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்கள்ஊர்வலமாக சென்று சென்னையில் உள்ள தெற்கு ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸிடம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications