2001 பார்முலா செல்லாது-தோழர்கள் முரண்டு
சென்னை:
2001ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திமுக கூட்டணியில் அமல்படுத்தப்பட்ட தொகுதிப் பங்கீடு பார்முலாவை இப்போதுஏற்றுக் கொள்ள முடியாது என்று மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளன.
கூடுதலான தொகுதிகளைக் கொடுத்தே ஆக வேண்டும் என்பதிலும் இரு கட்சிகளும் தீவிரமாக உள்ளன.கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்தத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
அதிமுக அணியில் இருந்த பாமகவுக்கு 27 தொகுதிகளும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 8 தொகுதிகள்தரப்பட்டன.
ஆனால், இம்முறை கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டதை விட கூடுதலான தொகுதிகளை திமுக கொடுக்க வேண்டும் என இந்தக்கட்சிகள் எதிர்பார்க்கின்றன, நெருக்கடியும் கொடுக்கத் தொடங்கியுள்ளன.
சமீபத்தில் நடந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமக தலைவர் கருணாநிதி,தொகுதிப் பங்கீட்டில் திமுக தியாகம் செய்யத் தயாராக இருக்கிறது. அதேபோல, கூட்டணிக் கட்சிகளும் தியாகத்திற்கு முன்வரவேண்டும் என்று தெரிவித்தார்.
இது கூட்டணிக்கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிருப்தியும், ஏமாற்றமும்அடைந்துள்ளன. 2001ல் கொடுக்கப்பட்ட அதே அளவிலான தொகுதிகளையே இந்த முறையும் கொடுக்க திமுக முன்வந்தால்அதை ஏற்பதில்லை என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் முடிவு செய்துள்ளன.
2001ம் ஆண்டு பார்முலா இப்போது செல்லாது. அது இப்போது நடைமுறைக்கு ஒத்துவராது என்று அவை கருத்துதெரிவித்துள்ளன. அதிமுக அரசை அகற்ற வேண்டும் என்ற காரணத்திற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் திமுகவுடன் கூட்டணிவைத்துள்ளன.
இதை திமுக தலைமை புரிந்து கொண்டு கூட்டணி சிதறிப் போய் விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தோழர்கள்கூறுகிறார்கள்.
திமுகவிடம் எத்தனை தொகுதிகளைக் கேட்பது என்பதை முடிவு செய்வதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக்கூட்டம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னையில் கூடுகிறது. அதேபோல, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 13ம் தேதி கூடிவிவாதிக்கவுள்ளது.
இரு கட்சிகளும் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை திமுகவிடம் எதிர்பார்க்கின்றன. ஆனால் இத்தனை தொகுதிகளை திமுகஒதுக்குவது சாத்தியமில்லை என்பதால் தொகுதிப் பங்கீடு அவ்வளவு சீக்கிரம் இறுதியாகாது என்று தெரிகிறது.