தைப்பூசம்: முருகன் ஆலயங்களில் கோலாகலம்
திருச்செந்தூர்:
உலகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில் இன்று தைப்பூசத் திருவிழா கோகலமாக நடந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்ட்டது. 3.30க்கு விஸ்வரூப தீபாராதனையும்,5 மணிக்கு அபிஷேகமும் நடந்தது. பின்னர் கோயில் கடற்கரையில் சுவாமி அஸ்திர தேவர் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சிநடந்தது.இந்த விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்துள்ளனர். இதையொட்டி நெல்லை, தூத்துக்குடிஉள்ளிட்ட இடங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்படுகின்றன.
அதே போல பழனி முருகன் கோவில், மதுரை திருப்பரங்குன்றம் முருகன் ஆலயம், பழமுதிர்ச்சோலை, திருத்தணி, உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகப் பெருமானின் தலங்களில் தைப் பூச விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூசத்தையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பழனிவந்துள்ளனர்.
அதே போல மலேசியாவில் கோலாலம்பூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி குகைத் திருக்கோவிலிலும் தைப்பூச விழா வெகுகோலாகலமாக நடைபெறுகிறது.