திமுகவுக்கு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவு?
சென்னை:
முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர பிரதமருக்குக் கோரிக்கை விடுத்த திமுகதலைவர் கருணாநிதிக்கு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆகியவை நன்றிதெரிவித்துள்ளன.
இதனால் இந்த இரு அமைப்புகளும் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கப் போவது உறுதியாகியுள்ளது.திமுக தலைவரை முக்கிய இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் இருவர் நேரில் சந்தித்துப் பேசியதையும், முன்னதாக சசிகலாவின்கணவர் நடராஜனும், இரு அமைச்சர்களும் அவர்களிடம் பேசியதையும், அப்போது முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரகமிஷன் அமைக்க முதல்வர் ஜெயலலிதா தயாராக இருப்பதாக நடரஜான் உறுதியளித்து, அதிமுகவை ஆதரிக்கக் கோரியதையும்கூறியிருந்தோம்.
ஆனால், ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டதை ஜெயலலிதா கண்டித்ததை நடராஜனுக்கு நினைவூட்டியதோடு,மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தது உள்ளிட்ட அதிமுக அரசின் செயல்பாடுகளையும் நினைவூட்டிவிட்டு அவர்கள் திரும்பிவந்துவிட்டனர்.
இந் நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுச் செயலாளர் சையத் சத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இஸ்லாமியர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையான இட ஒதுக்கீட்டை கோரிக்கை நிறைவேற, எங்கள் வேண்டுகோளை ஏற்றுபிரதமர் மன்மோகன் சிங்குக்கு திமுக தலைவர் கடிதம் எழுதியது மகிழ்ச்சியளிக்கிறது.
இஸ்லாமிய மக்களின் பிரச்சனையை தனது சொந்தப் பிரச்சனையாகக் கருதி உரிய சட்டம் கொண்டு வர வேண்டும் என கருணாநிதிதனது கடிதத்தில் கூறியுள்ளது மட்டற்ற மகிழ்ச்சிளிக்கிறது என்று கூறியுள்ளார்.
முமுக தலைவர் கடிதம்:
தமிழகத்தில் இஸ்லாமிய அமைப்புகளில் மிக பலமிக்கதான தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜவஹிருல்லா,கருணாநிதிக்கு எழுதியுள்ள கடிதத்தில்,
தங்களை நேரில் சந்தித்து வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முஸ்லீம்களுக்கு தனி ஒதுக்கீடு தரும் அரசியல் சாசனத்திருத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். எங்கள் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்து பிரதமருக்குகடிதம் எழுதியது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
இந்தச் சட்டத் திருத்தம் சரியாண முறையில் கொண்டு வரப்பட்டு, இட ஒதுக்கீடு பெற்றுத் தரும் வரை தங்கள் முயற்சிகள் தொடரவேண்டும் என்று ஜவஹிருல்லா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications