கொடை அருவியில் 2 வெளிநாட்டினர் உடல்கள்!
Subscribe to Oneindia Tamil
பெரியகுளம்:
கொடைக்கானல் அருகே உள்ள தலையாறு அருவியில் 2 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் உடல்கள் வந்து விழுந்ததால்பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காடைக்கானல் மலையில் தலையாறு என்ற இடத்தில் பெரிய அருவி உள்ளது. தலையாறு அருவி என அழைக்கப்படும் இந்தஅருவியிலிருந்து போகும் தண்ணீர்தான் மஞ்சளாறு என அழைக்கப்படுகிறது.
தலையாறு அருவியில் சனிக்கிழமை 2 உடல்கள் மிதந்து வந்தன. இதைப் பார்த்த வனக்காவலர் சக்திவேல் உடனடியாகபோலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து வந்து இரு உடல்களையும் மீட்டனர்.
இருவரும் வெளிநாட்டினர். சுற்றுலாப் பயணிகள் எனத் தெரிகிறது. இருவரும் அருவியின் மேலிருந்து தவறி விழுந்துஇறந்திருக்கலாம் அல்லது இவர்களை யாரேனும் கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
அவர்கள் யார் என்ற விசாரணை நடக்கிறது.












Click it and Unblock the Notifications