ஆந்திரா மீது உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடரப்படும் எனத் தெரிகிறது.

சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டத்திட்டமிட்டுள்ளது. இதை தமிழக அரசு கடுமையாக எதிர்த்துள்ளது. அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் ஆந்திர அரசின்நடவடிக்கையால் கொந்தளித்துள்ளனர்.

ஆந்திர அரசு அணை கட்டும் திட்டத்தைக் கைவிடாவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என முதல்வர்ஜெயலலிதா சமீபத்தில் சட்டசபையில் அறிவித்திருந்தார். வழக்கு தொடருவதற்கான ஆலோசனைகளில் பொதுப் பணித்துறைஉயர் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் தமிழக அரசின் பொதுப் பணித்துறைச் செயலாளர் பழனியப்பன் 2 நாட்களுக்கு முன் டெல்லி சென்றார்.அனேகமாக நாளை (திங்கள்கிழமை) வழக்குப் பதிவு செய்யப்படும் எனத் தெரிகிறது.

மிக விரிவான அளவில் இப்பிரச்சினை தொடர்பாக ஆராயப்பட்டு, ஆந்திர அரசின் திட்டத்தால் தமிழகத்தின் வட மாவட்டங்கள்எந்த அளவுக்குப் பாதிக்கப்படும் என்பதை தமிழக அரசின் மனுவில் விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

காவிரி நீர்ப் பிரச்சினை தொடர்பாக தொடர்பான செய்திகள்பு தமிழகத்தின் சார்பில் வழக்கு தொடுத்த வழக்கறிஞர்கள், சட்ட நிபுணர்களேபாலாறு தொடர்பான வழக்கின் மனுவையும் தயாரித்துள்ளனர்.

ஆற்று நீர் பிரச்சினை தொடர்பாக அண்டை மாநிலங்கள் மீது தமிழகம் தொடுக்கும் நான்காவது பெரிய வழக்காகும் இது. இதற்குமுன்பு காவிரிப் பிரச்சினையில் கர்நாடகத்தின் மீதும், முல்லைப் பெரியாறு, பவானி சாகர் ஆகிய அணைகள் தொடர்பாககேரளத்தின் மீதும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தற்போது ஆந்திரா மீதும் வழக்குப் பதிவாகவுள்ளது. மொத்தத்தில் தமிழகத்தைச் சுற்றியுள்ள 3 பெரிய மாநிலங்களும் தமிழகவிவசாயிகள், பொதுமக்களின் குடிநீர், விவசாய நீராதாரத்தை கேள்விக்குறியாக்கி வருகின்றனர்.

ஆம்பூரில் கடை அடைப்பு:

இதற்கிடையே ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நேற்று முழுகடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் முழுவதும் வரும் 28ம் தேதி முழு கடையடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் ஆம்பூர்நகரில் கடையடைப்புப் போராட்டம் நடந்தது.

கடைகள் நிறுவனங்கள், தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் என அனைத்து வணிக நிலையங்களும் மூடப்பட்டன. பல்வேறுகட்சியினர் கலந்து கொண்ட கண்டனப் பேரணியும் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+