போலீஸ்காரரை கொல்ல முயன்ற காக்கிகள்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில், முன் விரோதம் காரணமாக போலீஸ்காரர் ஒருவரை கடத்திச் சென்று கொலை செய்ய முயன்ற 2 போலீஸ்காரர்கள் மீதுவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை நத்தம் சாலையில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர்கள் கண்ணன், சுந்தரேசன், சங்கர். இவர்களில்கண்ணனுக்கும், மற்ற இரு காவலர்களுக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

இந் நிலையில் கடந்த புதன்கிழமை கண்ணனை சிலர் காரில் கடத்திச் சென்றனர். கண்ணனை அடித்து உதைத்து மயங்கியவுடன்,மேலூர் அருகே சூரக்குடி முனீஸ்வரன் கோவிலுக்குப் பின்புறம் உள்ள புதரில் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

மயக்கத்தில் உயிருக்குப் போராடிக் கிடந்த கண்ணனை அப் பகுதியில் சென்றவர்கள் பார்த்து போலீசுக்குத் தகவல் தந்தனர்.இதையடுத்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

மயக்கம் தெளிந்த கண்ணன் போலீஸாரிடம் கூறுகையில், தன்னை சங்கர், சுந்தரேசன் மற்றும் 2 பேர் சேர்ந்து கடத்தியதாகவும்,மற்ற இரண்டு பேரும் மலையாளத்தில் பேசியதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து சுந்தரேசன் உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஒரு போலீஸ்காரரை, சக போலீஸ்காரர்களே கடத்திச் சென்று கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டம் ஒழுங்கை வாழ வைக்கும் தமிழ்நாடு போலீசுக்கு ஒரு பெரிய ஓ.. போட்டு விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+