நீர்மூழ்கியில் பயணித்த கலாம்

Subscribe to Oneindia Tamil

விசாகபட்டிணம்:

நீர்மூழ்கிக் கப்பலில் ஜனாதிபதி அப்துல் கலாம் சுமார் 3 மணி நேரம் பயணம் செய்தார். இந்திய ஜனாதிபதி ஒருவர் நீர்மூழ்கியில்கடலுக்கடியில் பயணம் செய்தது இதுவே முதல் முறையாகும்.

ரஷ்ய தயாரிப்பான கிலோ ரக நீர்மூழ்கியான ஐஎன்எஸ் சிந்துரக்ஷக்கில் அவர் பயணித்தார். அவருடன் கடற்படைத் தளபதிஅருண் பிரகாஷ் மற்றும் மூத்த அதிகாரிகளும் சென்றனர்.

விசாகப்பட்டிணம் கடற்கரையில் இருந்து 5 மைல் தூரம் கடலுக்குள் சென்ற அந்த நீர்மூழ்கி 50 மீட்டர் ஆழத்தில் சென்றது.அப்போது நீர்மூழ்கியின் செயல்பாடு குறித்து கலாம் விரிவாகக் கேட்டறிந்தார். பின்னர் அதிலிருந்த 63 கடற்படை வீரர்களுடன்கலாம் கடலுக்கடியில் உணவருந்தினார்.

கடற்படையினரின் பிரச்சனைகள், தேவைகள் குறித்தும் அவர்களிடம் பேசித் தெரிந்து கொண்டார் கலாம். பின்னர்விசாகப்பட்டிணம் திரும்பிய கலாம், டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக விசாகப்பட்டிணம் கடற் பகுதியில் சுமார் 63 கடற்படைக் கப்பல்கள் பங்கேற்க அணி வகுப்பையும் கலாம்பார்வையிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+