For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வைகோவுடன் பேசி வருகிறேன்: காளிமுத்து

By Staff
Google Oneindia Tamil News

வேலூர்:

திமுக தலைவர் கருணாநிதியின் ராசியில் சனி பிடித்து விட்டது. இனிமேல் அவருக்கு தோல்விமுகம்தான் என்று அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.

வேலூரில் நடந்த அதிமுக பொதுக் கூட்டத்தில் காளிமுத்து பேசியதாவது:

இத்தனை நாள் நான் யாழ் மீட்டியபடி (சபாநாயகர் பதவி) இருந்தேன். யாழை மீட்டியது போதும் வேல் பிடிக்க (அவைத்தலைவர்) வா என்று கூறி என்னிடம் வேலைக் கொடுத்து பிரசாரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் அம்மா.

கருணாநிதி கடந்த முறை ஐந்து ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். அப்போது என்ன செய்தார்.? அம்மா மீது வழக்குப்போடுவதிலேயே காலத்தைக் கழித்தார். அவரது பெயரில்தான் நிதி உள்ளது. ஆனால் ஆட்சியை விட்டு அவர் போனபோதுகஜானா காலியாகவே இருந்தது. போகும்போது காலி செய்து விட்டுப் போய் விட்டார்.

ஆனால் அம்மா ஆட்சிக்கு வந்தவுடன் மோசமான நிதி நிலையை சரி செய்தார், சுனாமி, மழை, வெள்ள பாதிப்புகள்ஏற்பட்டபோது திறம்பட சமாளித்து நவாரணப் பணிகளை மிகச் சிறப்பாக செய்து முடித்தார். எல்லாத் துறைகளிலும் முத்திரைபதித்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த 13 மத்திய அமைச்சர்களும் என்ன செய்தார்கள். எந்தத் திட்டம் தமிழகத்துக்கு வராதபடி முட்டுக்கட்டைபோட்டனர். நிதி அமைச்சர் சிதம்பரம், தமிழகத்துக்கு எந்த நிதியும் வராமல் சதி செய்தார்.

நாடாளுமன்றத் தேர்தலைப் போல இப்போதும் அப்படியே ஜெயித்து விடலாம் என நினைக்கிறார் கருணாநிதி. ஆனால்கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் கதிதான் அவர்களுக்கு நேரும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்போது கருணாநிதி ராசியில் சனி. இனி அவருக்கு தோல்விமுகம்தான்.

கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கின்றன என்றார் அம்மா. அப்படியென்றால், திருடன் வந்தாலும் சமாளிப்பேன்,விருந்தாளி வந்தாலும் சமாளிப்பேன் என்று அர்த்தம்.

ஆனால் கருணாநிதியோ, யாரும் வீட்டை விட்டு ஓடிவிடக் கூடாது என்பதற்காக கதவுகளைப் பூட்டியே வைத்திருக்கிறார். வீட்டில்இருப்போர் (கூட்டணிக் கட்சிகள்) மீது அவ்வளவு நம்பிக்கை அவருக்கு.

வெள்ளரிப் பழத்தை வெள்ளிப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்தாலும் அது வெடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.அதுபோலத்தான் திமுக கூட்டணியின் கதையும். அது உடைவதை யாராலும் தடுக்க முடியாது.

யார், யார் அம்மாவுடன் கூட்டணி தொடர்பாக பேசிக் கொண்டுள்ளனர், யார் யாரெல்லாம் அம்மாவின் பின்னால் அணி வகுக்கப்போகிறார்கள் என்பது விரைவில் தெரிய வரும். வைகோ என்னிடம் அடிக்கடி பேசுவார். ஏன், நேற்று கூட பேசினாரே.

கருத்துக் கணிப்பு என்பது வானிலை அறிக்கை போன்றது. அவ்வப்போது மாறக் கூடியதாகும். இப்போது திமுக பக்கம் புயல் வீசிக்கொண்டுள்ளது. அதில் சிக்கி மாண்டுபோகாமல் தப்பிக்க பாதுகாப்பான (அதிமுக) இடத்துக்கு வாருங்கள் என்று திமுககூட்டணியினரை வேண்டிக் கொள்கிறேன்.

சிங்கம் வெகு தூரம் நடந்து சென்று திரும்பிப் பார்க்கும். இனி போக வேண்டிய தூரம் அதிகம் இல்லை என்று நினைத்துக்கொள்ளும். மீண்டும் தனது பயணத்தைத் தொடரும். அதுபோலத்தான் அதிமுகவும்.

2006ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று விட்டால் நிரந்தரமாக இனி அதிமுக ஆட்சிதான். திமுகவின் கதைஅத்தோடு காலி என்றார் காளிமுத்து.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X