பிளஸ் டூ தேர்வுக்கான வினாத் தாள்கள் ரெடி!
சென்னை:
மார்ச் 2ம் தேதி தொடங்கும் பிளஸ் டூ தேர்வுக்கான வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டு அச்சிடப்பட்டு விட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடுத்த வாரம் இந்த கேள்வித் தாள்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.பிளஸ் டூ தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை சுமார் 6 லட்சம் மாணவ, மாணவியர் எழுதவுள்ளனர்.தேர்வுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு, பாதுகாப்பு காரணங்களுக்காக வெளி மாநில அச்சகங்களில் இவை அச்சிடப்பட்டன.
அச்சிடப்பட்ட வினாத்தாள்கள் சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குனரகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. கேள்வித் தாள்கள் வைத்திருக்கும் அறையைச் சுற்றிலும் ஆயுதம் தாங்கிய போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அலுவலக வளாகத்திற்குச் செல்லும் பெரிய நுழைவாயில் மூடப்பட்டு விட்டது. சிறிய வாயில் வழியாகத்தான் பார்வையாளர்கள், அலுவலர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
சீல வைக்கப்பட்டுள்ள கேள்வித்தாள் கட்டுக்கள் அடுத்த வாரம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கு எடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications