For Daily Alerts
Just In
இலங்கையிலிருந்து இன்று 23 அகதிகள் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து இன்று அதிகாலை 23 அகதிகள் தமிழகம் வந்தனர்.இலங்கையிலிருந்து தினசரி அகதிகள் வந்தவண்ணம் உள்ளனர். இதுவரை 400க்கும் மேற்பட்ட அகதிகள் தமிழகம் வந்துள்ளனர்.
இந் நிலையில் இன்று அதிகாலை இலங்கையின் திரிகோணமலை, பேசாலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 தமிழர்கள், அகதிகளாக இன்று அரிச்சல்முனை பகுதிக்கு படகுகள் மூலம் வந்தனர். இவர்களில் 6 பேர் பெண்கள், 6 பேர் குழந்தைகள்.
அனைவரிடமும் விசாரணை நடத்திய தனுஷ்கோடி போலீஸார் பின்னர் அனைத்து அகதிகளையும் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Story first published: Tuesday, February 14, 2006, 5:30 [IST]