இனி நமக்கு வசந்த காலம்: வைகோ
சென்னை:
கூட்டணி விஷயத்தில் நான் நிதானமாக காய் நகர்த்தி வருகிறேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
சென்னை தண்டையார் பேட்டையில் நடந்த மதிமுக தொண்டரின் இல்லத் திருமண விழாவில் வைகோ பேசியதாவது:தமிழக அரசியலில் மதிமுக ஒரு வித்தியாசமான இயக்கம். கடந்த 12 ஆண்டுகளாக பல சோதனைகளை சந்தித்த கட்சி. இப்போதுபனிக்காலம் முடிந்துவிட்டது. இனி நமக்கு வசந்த காலம். தொண்டர்களின் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி.
நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதைச் செய்வேன். நீங்கள் ஆவேசமாக பேசுகிறீர்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது.
கூட்டணி விஷயத்தில் நான் நிதானமாக அடியெடுத்து வைக்கிறேன். இந்த இயக்கத்தின் தோழர்கள் எதையும்எதிர்பார்க்காதவர்கள். ஆனால், உங்களை நல்ல இடத்தில் வைக்க வேண்டுமே என்ற கவலையில் நான் இருக்கிறேன்.
நமக்கு எத்தனை இடங்கள் என்று தெரியாது. சம அந்தஸ்தில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுத் தர வேண்டும். பசியறிந்துசோறு போட வேண்டும்.
காலம் ஒரு நாள் மாறும், கவலைகள் யாவும் தீவும். உங்கள் உழைப்பை வீணடிக்க மாட்டேன். தமிழக மக்கள் நம்மைப் பார்க்கத்தொடங்கிவிட்டனர்.
சில தகவல்களை வெளியில் பகிர்ந்து கொள்ள முடியாது. நான் நிதானமாய் காய் நகர்த்தி வருகிறேன் என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications