குருவிக்கரம்பை சண்முகம் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரபல பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் சென்னையில் மரணமடைந்தார்.
சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த் துறை தலைவராக இருந்தவர் குருவிக்கரம்பை சண்முகம். மிகச் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர். பல்வேறு திரைப் படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.
கரையெல்லாம் செண்பகப் பூ என்ற படத்தில் சண்முகம் எழுதிய ஏரியிலே இலந்தை மரம் என்ற பாடல் மிகவும் பிரபலமானது.
64 வயதான குருவிக்கரம்பை சண்முகம் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
கவிதைக்காக பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள சண்முகத்தின் உடல், தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்துள்ள அவரது சொந்த ஊரான குருவிக்கரம்பையில் தகனம் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications