கேபிள் டிவி: கவர்னருக்கு எதிராக அதிமுக வழக்கு
சென்னை:
கேபிள் டிவிக்களை கையகப்படுத்தும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தருமாறு ஆளுநருக்கு உத்தரவிடக் கோரிஅதிமுக எம்எல்ஏவான சேகர் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதிமுக எம்எல்ஏ சேகர் பாபு இன்று உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,தமிழக மக்கள் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க வேண்டும் என்பதற்காக தமிழக அரசுசமீபத்தில் கேபிள் டிவிக்களை கையப்படுத்தும் மசோதாவைக் கொண்டு வந்தது. சட்டசபையில் அந்த மசோதாநிறைவேற்றப்பட்டுள்ளது.
அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக சுர்ஜித் சிங் பர்னாலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால்,இதுவரை கவர்னர் ஒப்புதல் வழங்கவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்டுள்ளார்.
கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் 10 மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதில் 9 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்துவிட்ட கவர்னர் கேபிள் டிவி சட்டத்துக்கு மட்டும்ஒப்புதல் அளிக்காமல் உள்ளார்.
இந்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட உடனேயே திமுக தலைவர் கருணாநிதியும் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் அவசர, அவசரமாக ஆளுநரை சந்தித்து பேசியதாகவும், ஆளுநருடன் இதுவரை 5 முறை தயாநிதி மாறன்பேசியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
தமிழ்நாட்டில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் எம்எஸ்ஓ உரிமையை மாறனும் அவரதுகுடும்பத்தினரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பல ஊர்களில் அவர்களது எம்எஸ்ஓ அவர்களதுஏகபோக உரிமையாக உள்ளது.
இதனால் மக்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டும், ஏழை,எளியவர்களும் டிவி சேனல்களை தெளிவாகப் பார்க்க தமிழக அரசு கேபிள் டிவி கையகப்படுத்தும் மசோதாவைக்கொண்டு வந்தது.
எனவே இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதை திருப்பி அனுப்பவேண்டும். அதையும் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கேபிள் டிவியை கையகப்படுத்த மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா என்பதையெல்லாம் கவர்னர் ஆராயமுடியாது. எனவே இதற்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்.
இந்தப் பிரச்சனை தொடர்பாக வழக்குத் தொடர எனக்கு முழு உரிமை உள்ளது. ஏனெனில், இந்த மசோதாவுக்குஆதரவாக நான் சட்டசபையில் வாக்களித்துள்ளேன்.
இந்த மனு மீது திங்கள்கிழமை விசாரணை நடக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications