நான் தான் உண்மையான பா.பிளாக்: சந்தானம்
மதுரை:
நான்தான் உண்மையான பார்வர்ட் பிளாக். நானும், எனது ஆதரவாளர்களும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று பார்வர்ட் பிளாக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சந்தானம்எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சந்தானம் எம்.எல்.ஏ.வை கட்சி மேலிடம்நீக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் சந்தானம்.இந்த ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், அகில இந்தியத் தலைவர்பிஸ்வாஸுக்கு சவால் விடுத்து நான் பேசியதாக கார்த்திக் கூறியுள்ளது தவறான தகவல். நான் யாரையும்விமர்சிக்கவில்லை. மனம் நோகும்படியும் பேசவில்லை.
நாங்கள்தான் உண்மையான பார்வர்ட் பிளாக். கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எங்கள்பக்கம்தான். மேலிடம் தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். அப்படி இல்லாவிட்டால் தமிழகத்தில்பார்வர்ட் பிளாக் உடைவதை தடுக்க முடியாது.
பார்வர்ட் பிளாக் பிரிவுகளை இணைக்கப் போவதாக கார்த்திக் கூறுகிறார். ஆனால் தேவர் சமுதாயத்தினர் மத்தியில்கொஞ்சம் கூட பெயரெடுக்காத சில்லறைத் தலைவர்களைத்தான் அவர் சேர்த்து வருகிறார்.
டாக்டர் சேதுராமன், ஸ்ரீதர் வாண்டையார், பி.டி.குமார் போன்றோர்களை கட்சியில் இணைக்க அவர் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாங்கள் தனிக்கட்சி தொடங்க மாட்டோம். பார்வர்ட் பிளாக் என்ற பெயரிலேயே இயங்குவோம். அதிமுகவுடன்கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவோம் என்றார் சந்தானம்.












Click it and Unblock the Notifications