முதல்வரிடம் நேற்று இல்லாத மாற்றம்: திருமா
டெல்லி:
கூட்டணிக்கு அதிமுக அழைத்தால் அதைப் பற்றி யோசிப்பேன் என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று திருமாவளவன் கூறுகையில்,ஒரு கட்சியை பதிவு செய்ய 6 சதவீத ஓட்டுக்களையோ அல்லது எட்டு எம்எல்ஏக்களையோ, ஒரு எம்பியையோபெற்றிருக்க வேண்டும் என்ற விதி உள்ளது. எங்கள் கட்சியைப் பதிவு செய்ய கோரிக்கை விடுத்துள்ளேன்.அதற்கான விசாரணையில் பங்கேற்கவே இங்கு வந்துள்ளேன்.
யாருடன் கூட்டணி என்ற முடிவை விரைவில் எடுப்போம். திமுக கூட்டணியில் எங்களைச் சேர்க்க ராமதாஸ் கோரிவருகிறார். ஆனால், திமுக தரப்பில் இதுவரை பதிலே இல்லை.
இதனால் ராமதாஸ் தனி அணி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதிமுக கூட்டணிக்கு அழைத்தால் அதைப்பற்றியும் யோசிப்பேன். அழைக்காத விருந்தாளியாக அதிமுகவிடம் போக மாட்டேன். கூப்பிட்டால் மட்டுமேபோய் பேசுவேன்.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அதிமுகவிடம் நிறைய மாற்றம் தெரிகிறது. இதனால் அதிமுக மீது மக்களுக்குநம்பிக்கை வந்திருக்கிறது என்றார்.