For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக கோழிகளுக்கு கேரளா தடை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து தமிழகம் உள்ளிட்டபல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் கோழிகளை வாங்க கேரள அரசு தடைவிதித்துள்ளது.

மகாராஷ்டிரத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதால், ஆந்திரா, கர்நாடகம்,தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள கோழிப் பண்ணைகளில் முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக அளவில் கோழிகள் உற்பத்தி செய்யப்படும் நாமக்கல்மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் தடுப்பூசிகள் போட நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் தாக்கவில்லை என்று அதிகாரிகள்தெரிவித்துள்ளனர். எனவே பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும்கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மண்டலத் தலைவர் டாக்டர்செல்வராஜ் கூறஉகையில், தமிழக வெப்ப நிலையைப் பொருத்தவரை இங்கு பறவைக்காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.

கடந்த ஒரு வருடமாகவே, பறவைக் காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்குறித்து கோழிப் பண்ணையாளர்களுக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளோம். எனவேபயப்படத் தேவையில்லை என்றார்.

இதற்கிடையே, தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு அனுப்பப்படும் கோழிகளை வாங்ககேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் தாக்கியுள்ளதால் அங்கு 50,000க்கும் மேற்பட்டகோழிகள் இறந்துள்ளன. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறுமாநிலங்களில் பீதி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் கோழிகளை வாங்கஅம்மாநில அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தின் நாமக்கல், தேனி, கன்னியாகுமரிமாவட்டங்களிலிருந்து அதிக அளவில் கேரளாவுக்கு கோழிகள் விற்கப்படுகின்றன.இந்தக் கோழிகளுக்கு தற்போது கேரளா தடை விதித்துள்ளது.

மேலும், தமிழக, கேரள எல்லைப் பகுதிகளில் வளர்க்கப்படும் கோழிகளைபரிசோதிக்கவும் அம்மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X