கருணாநிதி மகிழ்ச்சி-போன் மூலம் வைகோ பேச்சு
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று திமுக தலைவர் கருணாநிதியிடம் தொலைபேசி மூலமாகப் பேசிகூட்டணியில் தொடரப் போகும் தகவலைத் தெரிவித்தார்.
அவரது பேட்டி விவரம்:திமுக கூட்டணியில் மதிமுக தொடரும் என்ற வைகோவின் அறிக்கை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதைவரவேற்கிறேன். அதைத் தான் நானும் எதிர்பார்த்தேன்.
இன்று அறிக்கை வெளியிட்ட பின் என்னுடன் தொலைபேசியிலும் வைகோ பேசினார். என்னை எப்போது அவர்வந்து சந்திப்பது என்று இன்னும் முடிவாகவில்லை. இன்று ராமதாஸ், ஜி.கே. மணி ஆகியோருடன் தொகுதிப்பங்கீடு குறித்து பேசினேன். நாளை திருச்சி செல்கிறேன். வந்த பின் பிற தலைவர்களுடன் பேசுவேன் என்றார்கருணாநிதி.
அப்படியானால், திமுக-மதிமுக சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டதாகக் கருதலாமா என்று கேட்டதற்குபதிலளித்த கருணாநிதி,
எவ்வளவு முயற்சி செய்தாலும், கமா கூட போட முடியாது என்றார்.
மேலும் கூட்டணிக்கு எல்லா கட்சிகளின் ஆதரவையும் பெறுவோம் என்றார்.