கூடுதல் தொகுதி கிடைக்கும்: பாமக நம்பிக்கை
தர்மபுரி:
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்டு கடிதம் கொடுத்துள்ளோம். கூடுதல் தொகுதிகள் கிடைக்கும் என்றுநம்புகிறோம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தர்மபுரியில் செய்தியாளர்களிடம் அன்புமணி பேசுகையில், கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதல்தொகுதிகள் ஒதுக்கக் கோரி திமுக தலைமையிடம் கடிதம் கொடுத்துள்ளோம். திருப்திகரமான முறையில்தொகுதிகளை திமுக தலைவர் கருணாநிதி ஒதுக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.கூட்டணியிலிருந்து மதிமுக விலகும் என நாங்கள் நினைக்கவில்லை. அவர்கள் இன்னமும் திமுக கூட்டணியில்தான்இருக்கிறார்கள். விலக மாட்டார்கள் என நம்புகிறோம், விலகக் கூடாது என விரும்புகிறோம். இப்பிரச்சினைக்குசுமூக தீர்வு ஏற்படும்.
அதேபோல, விடுதலைச் சிறுத்தைகளையும் கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்று விரும்கிறோம். விடுதலைச்சிறுத்தைகளும் கூட்டணியில் இடம் பெறும் என நம்புகிறோம்.
மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கூட்டணி ஆட்சியில் இருந்தால், மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்யமுடியும். நல்ல திட்டங்களை கொண்டு வந்து நிறைவேற்ற முடியும். இது மெகா கூட்டணி. அனைத்துத்தொகுதிகளிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றார் அன்புமணி.