சென்னை: காஸ் சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை முகப்பேர் பகுதியில் வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டு ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர், 4 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முகப்பேர் மேற்கு, 2வது பிளாக் பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வசித்து வருபவர்பார்த்தசாரதி. சென்னை துறைமுகத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நிர்மலா. இவர்களுக்கு மோகன்,திலீப் என்ற இரு மகன்கள் உள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை இரவு அனைவரும் தூங்கினர். தூங்கப் போகும் முன்பாக காஸ் சிலிண்டரின் ரெகுலேட்டரைசரியாக மூடவில்லை எனத் தெரிகிறது. இதனால் காஸ் கசிந்து சமையலறை மற்றும் படுக்கை அறை முழுவதும்பரவியுள்ளது.

நள்ளிரவுக்கு மேல் கழிப்பறை செல்வதற்காக மோகன் எழுந்துள்ளார். அப்போது காஸ் வாசனையை நுகர்ந்த அவர்என்னவென்று பார்ப்பதற்காக விளக்கு ஸ்விட்சைப் போட்டுள்ளார். இதையடுத்து குபீர் என தீப்பிடித்துக்கொண்டது. சிலிண்டரும் வெடித்துச் சிதறியுள்ளது.

இதில் பார்த்தசாரதியின் வீடே இடிந்து தரைமட்டமானது. அத்தோடு அருகில் இருந்த 4 வீடுகளும் முற்றிலும்இடிந்து சேதமடைந்தன. இதில் மோகன், திலீப் ஆகிய இருவரும் தீயில் கருகி, இடிபாடுகளில் சிக்கி இறந்தனர்.பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜனார்த்தன், அவரது மனைவி பிரேமாவதி ஆகியோர் சுவர் விழுந்து இடிபாடுகளில்சிக்கி இறந்தனர்.

பார்த்தசாரதி, நிர்மலா, சுகுமார், அவரது மனைவி அம்பிகா, அவர்களது மகன் ஸ்ரீகுமார், கார்த்திக், மஞ்சு, கண்ணன்,செல்வம், அய்யனார் மற்றும் அடையாளம் தெரியாத இன்னொருவர் என 11 பேர் இடிபாடுகளில் சிக்கிகாயமடைந்தனர்.

இவர்களில் அம்பிகா உள்ளிட்ட 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவில் நடந்த இந்த துயர சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ந்தது. நிலநடுக்கம் என பயந்து பலர் வீடுகளைவிட்டு வெளியேறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+