வன்னியர்களை காங் புறக்கணிக்கவில்லை-கிருஷ்ணசாமி
சென்னை:
காங்கிரசில் வன்னியர்கள் புறக்கணிக்கப்படவில்லை என அக் கட்சியின் புதிய மாநிலத் தலைவராகநியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணசாமி கூறினார்.
அவரது பேட்டி விவரம்:காமராஜர் போன்ற தலைவர்கள் அலங்கரித்த தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் என்னை நியமித்த சோனியாகாந்திக்கு நன்றி. எங்கள் முதல் வேலை ஜெயலலிதா ஆட்சியை அகற்றுவது தான்.
வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெல்லும். எங்கள் கூட்டணியை பலவீனப்படுத்தஜெயலலிதா முயல்கிறார். அதில் அவர் தோற்பார்.
25ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியை தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரான வீரப்ப மொய்லி சந்தித்து காங்கிரஸ்விரும்பும் தொகுதிகளின் பட்டியலை வழங்குவார்.
கட்சிக்கு உழைப்பவர்களுக்கே சீட் தரப்படும். காங்கிரஸ் சாதி அடிப்படையிலான கட்சியல்ல. இங்கு வன்னியர்கள்புறக்கணிக்கப்படுவதாக திண்டிவனம் ராமமூர்த்தி போன்றவர்கள் பேசுவது அர்த்தமில்லாதது.
திண்டிவனத்தை ஆதரிக்கும் காங்கிரசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications