தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!
சென்னை:
சென்னை தலைமைச் செயலகம் அமைந்துள்ள 10 மாடிக் கட்டடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால்ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் 10 மாடிகள் கொண்ட தலைமைச் செயலக அலுவலக வளாகம்உள்ளது. இங்கு பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. 3000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இங்கு பணியாற்றிவருகின்றனர்.கட்டடத்தின் 8வது மாடியில் இன்று காலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மின்சார கசிவு காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து வயர்கள் தீப்பிடித்து எரிந்தன.
7வது மாடி வரை வயர்கள் பட்பட் என்று வெடித்துச் சிதறின. 6வது மாடியிலும் வயர்கள் எரியத் தொடங்கின.முழுக் கட்டடத்திற்கும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் அலறி அடித்துக் காண்டு வெளியேறினர். ஒரே நேரத்தில் அத்தனைபேரும் மாடிகளிலிருந்தும், லிப்ட் மூலமும் வெளியேறியதால் பெரும் நெரில் ஏற்பட்டது. தீயணைப்புத் துறைக்குத்தகவல் போய் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அப்போது வயர்கள் தீப்பிடித்து எரிவதும் நின்று விட்டது.இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீவிபத்து குறித்து அறிந்ததும் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம்,அன்பழகன் ஆகியோர் அங்கு வந்து பார்த்தனர்.
மிகவும் மோசமான நிலையில் இருந்த மின் மாற்றி சாதனத்தால்தான் இந்த விபத்து நடந்ததாக அறிந்த ஓ.பன்னீர்செல்வம், உடனடியாக அந்த சாதனத்தை மாற்ற உத்தரவிட்டார்.
பிற்பகல் 1 மணிக்கு மேல் வேறு மின்மாற்றி மூலம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதன் பிறகே தலைமைச்செயலக வளாகத்தில் இயல்பு நிலை திரும்பியது.












Click it and Unblock the Notifications