For Daily Alerts
Just In
காட்பாடி ரயில் நிலையத்தில் பெரும் போராட்டம்
சென்னை:
பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநில அரசு அணை கட்டுவதைக் கண்டித்து வேலூர் மாவட்டம் காட்பாடியில் ரயில்மறியல் போராட்டம் நடத்த முயன்ற 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும்தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந் நிலையில், அகில இந்திய கட்டுமானத் தொழிலாளர் சங்கம்மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இன்று காலை வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம்அருகே 300க்கும் மேற்பட்டோர் கூடினர்.
காட்பாடி ரயில் நிலையத்திற்குள் புகுந்து ரயில் மறியல் போராட்டம் நடத்த அவர்கள் முயன்றனர். ஆனால்போலீஸார் அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
போராட்டத்தில் ஈடுபட வந்தவர்கள் அத்துமீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றதால் போலீஸார் அவர்களைவலுக்கட்டாயமாகவும், குண்டுக் கட்டாகத் தூக்கியும், சிலரை அடித்தும் வேனில் தூக்கிப் போட்டதால் அங்குபரபரப்பு ஏற்பட்டது.
Comments
Story first published: Wednesday, February 22, 2006, 5:30 [IST]