விஜயேந்திரர் மனு: மார்ச் 3க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சங்கரராமன் கொலை வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கக் கோரி விஜயேந்திரர், ரகுஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை மார்ச் 3ம் தேதிக்குஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுவை அமர்வு நீதிமன்றத்தில் சங்கரராமன் கொலை வழக்கு இன்று விசாரணைக்குவந்தது. அப்போது ஜெயேந்திரர், விஜயேந்திரர், சுந்தரசே அய்யர் ஆகியோரைத் தவிரமற்ற 21 பேரும் நேரில் ஆஜராகியிருந்தனர். அப்ரூவர் ரவிசுப்ரமணியம்வந்திருந்தார்.வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, விஜயேந்திரர் மற்றும் ரகுஆகியோர் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தாக்கல்செய்துள்ள மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே சங்கரராமன் கொலை வழக்கைவிசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று ஜெயேந்திரர் தரப்பு வழக்கறிஞர் கோரிக்கைவைத்தார்.
இதையடுத்து மார்ச் 3ம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதிசின்னப்பாண்டி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications