For Daily Alerts
Just In
ஜெ பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் சாவு
காஞ்சிபுரம்:
முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி காஞ்சிபுரத்தில் அன்னதானம் வளங்கும் நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு பலியானார்.
ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர்கள் தேர் இழுத்து, ரத்ததானம் செய்து, இலவச வேட்டி, சட்டை தந்து. கேக்வெட்டி, வேட்டு போட்டு, பொதுக் கூட்டம் நடத்தி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம் பம்மல் நகரில் அன்னதான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் பம்மல் நகர் அதிமுக செயலாளர்வெள்ளைச்சாமி (58) மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயேஇறந்தார்.
இதையடுத்து அமைச்சர்கள் வளர்மதி, சோமசுந்தரம் ஆகியோர் சென்று வெள்ளைச்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Comments
Story first published: Saturday, February 25, 2006, 5:30 [IST]