பங்களாதேசில் பயங்கர தீ விபத்து-54 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிட்டகாங்:
வங்க தேசத்தில் சிட்டகாங் நகரில் ஜவுளி ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 54 பேர் பலியாயினர். மேலும்15க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை. இதனால் அவர்களும் பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் ஆவர்.
ஒரு ஜவுளி ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த ஆலையே இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கியும்தீயில் கருகியும் பலர் உயிரிழந்தனர். இதுவரை 54 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பலரது உடல்கள்இடிபாடுகளின் கீழ் கிடக்கின்றன.
இந்த 3 மாடி ஜவுளி ஆலையில் 1,500 பேர் பணியில் இருந்தனர். ஆலையின் கதவு வெளிப்பக்கமாகபூட்டப்பட்டிருந்தது. இதனால் தீ விபத்து ஏற்பட்டதும் தொழிலாளர்களால் அங்கிருந்து தப்ப முடியாமல்போய்விட்டதே இவ்வளவு பலிகள் நடந்ததற்குக் காரணம் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications