ரயில்வே பட்ஜெட்- சுத்த வேஸ்ட் என்கிறது அதிமுக
சென்னை:
ரயில்வே பட்ஜெட்டால் சாதாரண மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரயில்வேயிடம் கையிருப்பு அதிகரித்துள்ளபோதும் அதை ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் மாற்றவில்லை.முதல் வகுப்பு, ஏசி கட்டணத்தை குறைத்துள்ளார்கள். ஆனால் சாதாரண மக்கள் பயன்படுத்தும் 2ம் வகுப்புக்கட்டணத்தை ஏன் குறைக்கவில்லை?
எனது அரசு தான் சென்னையை உற்பத்தித் துறையில் அச்சாணியாக உயர்த்தியது. இதனால் கூடுதல் ரயில் சரக்குபோக்குவரத்து மற்றும் அடிப்படைக் கட்டமைப்பு வசதி தேவைப்படுகிறது. ஆனால், வழக்கம்போல் இந்தமுறையும் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மத்திய அரசின் ரயில்வே திட்டங்கள் உதவவில்லை என்றுகூறியுள்ளார்.
கருணாநிதி பாராட்டு:
அதே நேரத்தில் மத்திய அரசுக் கூட்டணியில் இடம் வகிக்கும் திமுக தலைவர் கருணாநிதி, இந்த பட்ஜெட்டைபாராட்டித் தள்ளியுள்ளார்.