For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாணவியைக் கடத்தி கற்பழித்த ஆசிரியர் !

By Staff
Google Oneindia Tamil News

அரியலூர்:

பள்ளி மாணவியை கடத்திச் சென்று கற்பழித்த உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் கிருஷ்ணன் கோயில் பகுதியில் வீடியோ கடை நடத்தும் உரிமையாளரின் 17 வயது மகள் (இவர்களதுவிவரம் மறைக்கப்பட்டுள்ளது) சி.எஸ்.ஐ. மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஜுலியஸ் சாந்தகுமார் (37), அந்த மாணவியிடம் காதல் லீலைசெய்துள்ளார். உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி, மாணவியை தனது ஆசைக்கு இணங்கவைத்துள்ளார்.

யாருக்கும் தெரியாமல் அந்த மாணவியை லால்குடி அருகே தனது சொந்த ஊருக்கு அழைத்துச் சென்றுகற்பழித்துள்ளார்.

இந் நிலையில் மகள் காணாமல் போய்விட்டதாக அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியபோது சாந்தகுமாருடன் அந்த மாணவி சென்றது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அவரை போலீசார் பஸ் ஸ்டாண்டில் வைத்து கைது செய்து மாணவியை மீட்டனர்.

அந்த மாணவியிடம் விசாரணை நடத்தியபோது ஆசிரியர் அவரை மானபங்கம் செய்தது தெரியவந்தது.இதையடுத்து அந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.

இந்த விவகாரத்தில் சாந்தகுமாருக்கு உடந்தையாக இருந்ததாக இன்னும் இரு பள்ளிகளின் உடற்கல்விஆசிரியர்களான வின்சென்ட் சேவியர், ரமேஷ் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X