பாஜகவுடன் இணைந்து இந்து கூட்டணி: சு.சுவாமி
சென்னை:
தமிழகத்தில் பாஜகவுடன் கைகோர்த்து இந்து கூட்டணியை உருவாக்கத் தயாராக இருப்பதாக ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக தயாராக இருந்தால் நாங்களும் கூட்டணி அமைக்கத் தயார். ஒரு காலத்தில் பாஜக கூட ஜனதா கட்சியில்தான் இருந்தது. இருவரும் சேர்ந்த இந்துக் கூட்டணியை அமைக்கலாம்.
விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளரான திருமாவளனுடன் ஜெயலலிதா கூட்டணி அமைத்தது கடும்கண்டனத்துக்குரியது. புலிகளுக்கு எதிராக இத்தனை காலம் ஜெயலலிதா பேசியது எல்லாம் பொய்என்றாகிவிட்டது.
சுய நலத்துக்காகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தேச நலனை தூக்கி வீசிவிட்டார் ஜெயலலிதா.
திமுகவில் புலிகளின் ஆதரவாளரான வைகோவும், அதிமுகவில் திருமாவளவனும் உள்ளனர். இதனால் இந்தஇரு கூட்டணிகளுமே தேச விரோதிகள் என்றார்.
பாஜக-ஜனதா கட்சி கூட்டணி அமைந்தால் புதிய தமிழகத்தைச் சேர்ப்பீர்களா என்று கேட்டபோது, 1996ல் ஜனதாகட்சி சின்னத்தில் போட்டியிட்டுவிட்டு பின்னர் எங்களை முதுகில் குத்தியவர் கிருஷ்ணசாமி என்றார் சுவாமி.