For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காந்தி சிலை தகர்ப்பு-6 பேருக்கு 5 ஆண்டு சிறை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

விழுப்புரத்தில் காந்தி சிலையை குண்டு வைத்துத் தகர்த்த வழக்கில் தமிழர் விடுதலைப் படைத் தலைவர் மாறன்உள்ளிட்ட 6 பேருக்கு தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.

தமிழர் விடுதலைப் படை என்ற தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவர் மாறன். இவர் வீரப்பனின் நெருங்கியகூட்டாளியாகவும் விளங்கினார். கடந்த 1993ம் ஆண்டு விழுப்புரத்தில் இருந்த காந்தி சிலை வெடிகுண்டுவைத்துத் தகர்க்கப்பட்டது.

இந்த வழக்கில்முருகேசன், மாறன், ரேடியோ வெங்கடேசன், சுந்தரம், நல்லரசன், ரவிச்சந்திரன், சங்கர் ஆகிய 7பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் முருகேசன் தவிர மற்ற 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது சென்னை 5வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 6 பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல்தண்டனை, தலாரூ. 100 அபராதம் விதித்து நீதிபதி ராமசாமி தீர்ப்பளித்தார்.

தலைமறைவாக உள்ள முருகேசன் மீதான வழக்கு தனியாக விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ள மாறன் மீது மொத்தம் 11 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X